ராணுவ வீரர்களுக்கு, குண்டு துளைக்காத டிரக்குகள், வாங்கி தராமல், பிரதமருக்கு 8,400 கோடி ரூபாய் மதிப்பில் நவீன விமானம் வாங்கியிருப்பது நியாயமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தனது ட்விட்டரில், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு ஆயத்தமாக வாகனங்களில் செல்லும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “ராணுவ வீரர்களுக்கு, குண்டு துளைக்காத டிரக்குகள், வாங்கி தராமல், பிரதமருக்கு 8 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் நவீன விமானம் வாங்கியிருப்பது நியாயமா?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் தற்போது விவாதப் பொருளாகி உள்ளது.
हमारे जवानों को नॉन-बुलेट प्रूफ़ ट्रकों में शहीद होने भेजा जा रहा है और PM के लिए 8400 करोड़ के हवाई जहाज़!
क्या यह न्याय है? pic.twitter.com/iu5iYWVBfE
— Rahul Gandhi (@RahulGandhi) October 10, 2020

























