மும்பை: பண்டிகை மாதங்களில், வங்கி ஊழியர்களுக்கு பல விடுமுறைகள் கிடைக்கின்றன. அதன்படி நவம்பரில், தீபாவளி மற்றும் குரு நானக் ஜெயந்தி ஆகிய இரண்டு முக்கிய திருவிழாக்களில் வங்கிகள் மூடப்படும் இது தவிர நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளில் மூடப்படும்.
வழக்கமாக, வங்கிகள் ஞாயிறு மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் செயல்படாது. ஆனால், 2020 நவம்பரில், தீபாவளி இரண்டாவது சனிக்கிழமையன்று வருகிறது. அதாவது வங்கி ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஒரு விடுமுறை குறைகிறது.
தீபாவளி வார இறுதி நாட்களைத் தவிர வேறு எந்த நாளிலும் இருந்திருந்தால், வங்கிகள் கூடுதலாக ஒரு நாள் மூடப்பட்டிருக்கும்.

























